பள்ளியில் பேசி கொண்டிருக்கும் போதே பிரிந்த 6-ம் வகுப்பு மாணவி உயிர்

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி, வழக்கம் போல் இன்று பள்ளி சென்ற நிலையில், இடைவேளையின் போது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மாணவி ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இதய கோளாறு காரணமாக மாணவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்