விவசாயிகள், மக்கள் எடுத்த முடிவு - நாமக்கல்லில் பரபரப்பு

x

நாமக்கல் அருகே செயல்பட்டு வரும் நாட்டுச்சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பரமத்தி வேலூர் அடுத்த ரங்கம்பாளையத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நாட்டுச்சர்க்கரை ஆலை, கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் இருந்து கழிவுநீர், சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கழிவு நீர், விவசாய நிலத்தில் செல்வதாக பலமுறை ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டும் செவிசாய்க்க வில்லை என குற்றம்சாட்டி,விவசாயிகள் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்