மயான பாதையை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.. நாமக்கலில் பரபரப்பு சம்பவம்

x

நாமக்கல் மாவட்டம் ஓலப்பாளையம் கிராமத்தில் உள்ள ஓடைக்கு அருகே 20 அடி அகலத்தில் உள்ள பாதையை கிராம மக்கள் மயானித்திற்கு செல்ல பயன்படுத்தி வந்த நிலையில் இந்தப் பாதையை அடைத்து சந்திரசேகர் என்பவர் வேலி அமைத்துள்ளதாகவும் இது குறித்து கேட்ட பொழுது அது தனக்கு சொந்தமான இடம் என்று தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குமாரபாளையத்தில் இருந்து தேவூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்