உல்லாச வெறி.. தோழியிடம் சொல்லிவிட்டு பிஞ்சுக்கு சோறு ஊட்டிய கையாலேயே பாலூற்றிய தாய்

x

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்தையா-சினேகா. இவர்களுக்கு நான்கு வயதில் பூவரசி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சினேகாவுக்கு சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை முத்தையா கண்டித்ததுடன் காவல் நிலையத்திலும் புகார் அளித்து இருக்கிறார். காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையினை தொடர்ந்து சினேகா கணவனுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி இருக்கிறார்.இந்த நிலையில் திடீரெனபெண் குழந்தையுடன் பரமத்திவேலுரில் உள்ள தனது தோழி கோகிலாவின் வீட்டுக்குச் சென்ற சினேகா, அங்கு தன்னுடைய தகாத உறவுக்கு பெண் குழந்தை இடைஞ்சலாக இருப்பதாகத் தோழியிடம் கூறி இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து இருக்கிறார் தாய சினேகா. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சினேகா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தோழி கோகிலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்