வீடு புகுந்து சலித்தெடுத்த கொள்ளையர்கள்... பீரோவுக்கு பதில் குப்பையில் வைக்கப்பட்ட தங்கம்

x

நாகர்கோவில் அருகே ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. வீட்டின் பீரோவில் வைக்காமல் குப்பைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 50 சவரன் நகைகள் தப்பியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள பெருமாள் நகரில் வசித்து வருபவர் ரமேஷ் செல்லசாமி. புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர் பீரோவை உடைத்து, 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சுமார் ஐந்து சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்து வீட்டுக்கு வந்த ரமேஷ் செல்லச்சாமியின் மனைவி பீரோவில் வைக்காமல் அலமாரி, குப்பைதொட்டி உள்ளிட்ட இடங்களில் சாதாரணமாக மறைத்து வைத்திருந்த நகைகளை சோதனை செய்தபோது, அவை திருடப்படாமல் அப்படியே இருந்தது. சாதாரணமாக குப்பை உள்ளிட்ட இடங்களில் வைத்திருந்த 50 சவரன் நகைகள் திருடன் கண்ணில் படாததால் தப்பியதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடர்களை பிடிக்கும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்