வழக்கு பதியப்பட்டதால் 5 நாட்களுக்கு பின் சடலத்தை பெற்ற குடும்பத்தினர்

x

நாகர்கோவிலை சேர்ந்த 37 வயதான ஆஷா புஷ்ரா,

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணம் ஆகாத இவர், கடந்த 22-ம் தேதி தற்கொலை செய்துக்கொண்டார். த*கொலை செய்துக்கொள்வதற்கான காரணம் குறித்து புஷ்ரா பேசிய வீடியோ மற்றும் எழுதிய கடிதம் ஆகியவை வெளியானது. அவற்றில், திருமணம் செய்வதாக கூறி தான் பணிபுரிந்த நிறுவன உரிமையாளரான நவநீத் ஏமாற்றியதால் ஆஷா புஷ்ரா த*கொலை செய்து கொள்வதாகவும், ஏற்கனவே இது தொடர்பாக வடசேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். நவநீதின் தந்தை சசீதரன், நண்பர் பார்த்தீபன், வடசேரி போலீசார் ஆகியோர், தனது த*கொலைக்கு காரணமானனவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதியும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி, ஆஷா புஷ்ரா,

பெற்றோர் கூறி வந்தனர். இந்த நிலையில்,நீவநீத், அவரது தந்தை சசீதரன், நண்பர் பார்த்தீபன் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து 5 நாட்களுக்கு பின் குடும்பத்தினர் சடலத்தை பெற்று அடக்கம் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்