ஆட்சியர் திடீர் உத்தரவு... போட்டிபோட்டு கையெழுத்திட்ட அதிகாரிகள் | Nagercoil

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை, பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இக்கூட்டத்தில் அதிகாரிகள் முறையாக பங்கேற்காமல் காலதாமதமாக வருவதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, குறை தீர்ப்பு முகாமிற்கு வரும் அதிகாரிகள், தங்கள் வருகை நேரம் மற்றும் பெயரை புதிவேட்டில் எழுத வேண்டும் என ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சரியான நேரத்தில் பங்கேற்றதோடு, அலுவலக வாயிலில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் பெயரை எழுதுவதற்கு போட்டி போட்டு நின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்