CPCL ஆலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்..! நாகையில் உச்சகட்ட பரபரப்பு | Nagapattinam

x

நாகையில், உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி, சி.பி.சி.எல். எண்ணெய் ஆலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் பனங்குடியில் அமைந்துள்ள சிபிசிஎல் எண்ணெய் ஆலை விரிவாக்கத்திற்கு பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் கிராம மக்கள் நிலம் வழங்கியுள்ளனர். இதற்காக மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று மாவட்ட நிர்வாகம் தலைமையில் சிபிசிஎல் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த 4 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. எனினும், இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனக்கூறி, ஆலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்