நடு இரவில் நடுக்கடலில் திக் திக்... திடீரென எதிரே வந்து நின்றதும் மிரண்ட தமிழக மீனவர்கள்

x

நாகை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 மைல் தொலைவில் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர், மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். தமிழக மீனவர்களின் படகில் ஏறிய இலங்கை கடல் கொள்ளையர்கள், அதில் இருந்த 250 கிலோ வலை, செல்போன், ஜிபிஎஸ் கருவி, 100 லிட்டர் டீசல் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அளித்த புகாரின் பேரில்,

வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச கடல் எல்லையில் நடைபெறும் கடற்கொள்ளைகளை தடுக்க இந்திய கடலோர காவல் படை அப்பகுதிகளில் ரோந்து பணிகளை துரிதப்படுத்திட வேண்டுமென தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்