கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிர்ச்சி.. நாகை அருகே பரபரப்பு

x

தமிழக மீனவர்களின் வலைகளை இலங்கை கடற் கொள்ளையர்கள் கொள்ளையடித்து அட்டூழியம் செய்துள்ளனர்.

வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த நவீன், சச்சின், ராஜேந்திரன், மாதேஸ்வரன் ஆகிய நான்கு பேரும் நேற்று மதியம் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கோடியக்கரைக்கு தென் கிழக்கே வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு பைபர் படகில் வந்த மூன்று இலங்கை கடற்கொள்ளையர்கள், இவர்களை வழி மறித்து, கடலில் கிடந்த இவர்களது மீன்பிடி வலைகளை அறுத்து, கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 350 கிலோ எடை கொண்ட இந்த மீன் பிடி வலையின்

மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். இது குறித்து வேதாரண்யம்

கடலோர காவல் நிலையத்தில் வலையை பறிகொடுத்த படகு உரிமையாளர் முத்துவேல் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்