மீண்டும் வந்த பைரேட்ஸ் கொடூரர்கள்.. உயிரை பிடித்து ஓடிவந்த தமிழர்கள்.. கோடியக்கரையில் பதற்றம்
மீண்டும் வந்த பைரேட்ஸ் கொடூரர்கள்.. உயிரை பிடித்து ஓடிவந்த தமிழர்கள்.. கோடியக்கரையில் பதற்றம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆறுகாட்டுத்துறை மீனவக் கிராமத்தில் இருந்து ஃபைபர் படகில் பாக்கியராஜ், அமுதகுமார், அன்பழகன், ஜானக்கியன், நாகராஜ் ஆகிய 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த 5 கடற்கொள்ளையர்கள், மீனவர்களின் படகில் ஏறி கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும், படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவி, 20 கிலோ மீன்கள், செல்ஃபோன், டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மீன்பிடி வலைகளை வெட்டி எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, 5 மீனவர்களும் கரைக்கு வந்து சேர்ந்தனர். தலையில் காயமடைந்த அன்பழகன், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 4 மீனவர்களும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.