Good Touch, Bad Touch சொல்லி கொடுத்தவரே குழந்தைகளிடம் அத்துமீறிய அதிர்ச்சி

x

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு சுனாமியால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மனநல ஆலோசகர் சத்திய பிரகாஷ் வகுப்பு எடுத்து இருக்கிறார். அப்போது குழந்தைகளிடம் சத்திய பிரகாஷ் அத்துமீறியதாகத் தகவல் வெளியானது.இது தொடர்பாக விடுதி காப்பாளர் சசிகலா சத்திய பிரகாஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஐந்து குழந்தைகள் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மனநல ஆலோசகர் சத்திய பிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்