துடித்து நின்ற கல்லூரி மாணவி உயிர்..முகத்தை பார்த்து பார்த்து கதறும் தாய்

x

அரசு பேருந்து மோதி 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த மேலஇலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அஸ்வினி தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அஸ்வினி தனது சித்தப்பா மகன் அபினேசுடன் குருக்கத்தி நெடுஞ்சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்ருந்தார். அப்போது, நாகர்கோயிலில் இருந்து, வேளாங்கண்ணிக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலை உள்ளிட்ட பல இடங்களில் படுகாயம் அடைந்த அஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்த அபினேஸ், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், விபத்து நடந்த நெடுஞ்சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் போராட்டம் வாப்பஸ் பெறப்பட்டது.

போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின்னர் போராட்டம் வாப்பஸ் பெறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்