பசும்பொன் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு... பலத்த போலீஸ் பாதுகாப்பு | Muthuramalinga Thevar

x

மதுரை வங்கிப் பெட்டகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட தங்க கவசம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்காக இன்று தங்க கவசம் மதுரை வங்கிப் பெட்டகத்திலிருந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் முன்னிலையில் தங்க கவசம் பெறப்பட்டு, பசும்பொன் எடுத்துவரப்பட்டது.

பின்னர் அது, முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் அன்வர் ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று முதல் தேவர் நினைவிடத்தில் தங்ககவசம் ஒருவாரம் அணிவிக்க பட்டு, அடுத்த வாரம் மதுரை வங்கி லாக்கருக்கு கொண்டு செல்லப்படும்.


Next Story

மேலும் செய்திகள்