உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு.. அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

x

உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு குறித்து அதிகாரிகளுடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.

உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு, பழனியில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனை ஆய்வு செய்வதற்காக பழனி சென்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயிலில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள், பிற பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பழனி ஆண்டவர் கல்லூரியில் அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடுக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த மாநாட்டில் கேரளா, கர்நாடகா மாநில முதல்வர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்