காதல் மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தி கொன்ற கணவன்.. ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த சடலம்

x

காங்கேயம் வெள்ளக்கோவில் பச்சாபாளையம் காலனியை சேர்ந்தவர் நர்மதா. இவர் தன் அத்தை மகனான சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தம்பதியின் 9 வயது மகனுக்கு கடந்த 20 ஆம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது. இதற்காக அருகில் உள்ள மில் குடியிருப்பில் வசித்து வந்த மனைவியின் வீட்டிற்கு சென்ற சிவக்குமார், மகனின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு மனைவியுடனே தங்கியதாக தெரிகிறது. இதில், சம்பவத்தன்று இரவு இருவருக்கிடையும் தகராறு ஏற்பட்ட நிலையில், காய்கறி நறுக்கும் கத்தியால் மனைவியை கழுத்தில் குத்தி கொன்றுவிட்டு சிவக்குமார் தப்பியோடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, தலைமறைவாக இருந்த சிவக்குமார், காங்கேயம் காவல்நிலையத்தில் சரணடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்