ஹாஸ்டலில் கரகரவென கழுத்தறுத்து கொல்லப்பட்ட இளம்பெண் | Murder | Thanthitv

x

பெங்களூருவில் நள்ளிரவில் விடுதிக்குள் புகுந்த நபர் பெண்ணைக் கழுத்தை அறுத்து துடிக்கத் துடிக்கக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... பீகாரைச் சேர்ந்த 23 வயது கிருதி குமாரி கோரமங்களாவில் தங்கும் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் இரவு 11.10 மணிக்கு கத்தியுடன் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் 3வது மாடியில் கிருதி குமாரியின் அறைக்கு நேரே சென்று கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பியுள்ளார்... போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்... விடுதியில் கிருதி குமாரியின் அறைக்கு அந்த இளைஞர் நேரே சென்ற நிலையில் ஒருவேளை தெரிந்தவராகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விடுதி உரிமையாளர்களின் அலட்சியமே இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்