தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில்... குரங்கம்மை பரிசோதனை மையம்

x

தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் குரங்கம்மை நோய்க்கு பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பரவக்கூடிய குரங்கம்மை நோய் தொடர்பாக பல்வேறு விமான நிலையங்களும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, குடல்வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்