பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுப்பதுபோல் வீடியோ எடுத்த தாய், தந்தை - தருமபுரியில் அதிர்ச்சி

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, குடும்பத் தகராறில் தாய் மற்றும் தந்தை, தங்கள் பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்காடு வகையைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநர் மணி, தனது மனைவி சந்தியா மற்றும் 6 மாத பச்சிளம் குழந்தைக்கு, டெம்போவில் அமர்ந்தபடியே விஷம் கொடுப்பதுபோல் வீடியோ பதிவு செய்து, அதனை உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, பின்னர் அவர் மாயமாகியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்