கஞ்சாவுடன்சேர்த்துரூ. 2 லட்சம் பறிமுதல் - பணத்தை திரும்ப கேட்ட குற்றவாளிகளின் அண்ணன்

x

கஞ்சாவுடன்சேர்த்துரூ. 2 லட்சம் பறிமுதல் - பணத்தை திரும்ப கேட்ட குற்றவாளிகளின் அண்ணன்

சிவலார்குளம் விலக்கு பகுதியில் வாகன சோதனையின் போது கஞ்சா வைத்திருந்த மூன்று சகோதரர்கள் உட்பட நான்கு பேர் பிடிபட்டனர். அவர்களது வீட்டில் 3 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் பிடிபட்ட சகோதரர்களின் அண்ணனான கல்யாண சுந்தரம், பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லட்ச ரூபாய் பணத்தை திரும்ப தருமாறு. ஆலங்குளம் காவல்நிலையத்தில் ரகளை செய்தார். இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டுகளான தங்கதுரை, ஜான்சன் ஆகியோரிடம் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது நண்பர் நிர்மல்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில், கல்யாணசுந்தரம் மற்றும் நிர்மல்குமார் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இரண்டு ஏட்டுகளையும் தாக்க முயன்றனர். இதில், ஏட்டு தங்கதுரைக்கு மட்டும் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது. இந்நிலையில், தலைமறைவான கல்யாண சுந்தரம் மற்றும் அவரது நண்பர் நிர்மல்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்