10 வயது சிறுமி கொலை - ரூ.3 லட்சம் நிவாரணம்

x

நாமக்கல் அருகே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

சத்திநாயக்கன்பாளையம் பகுதியில், 10 வயது சிறுமி உட்பட மூன்று பேரை, செந்தில்குமார் என்பவர் கத்தியால் தாக்கினார். இதில் 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிவாரணம் அளித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்