மைக்ரோசாப்ட் பிரச்சனையால் சென்னை ஏர்போர்ட்டில் மாற்று வழியை கையாண்ட ஏர்லைன்ஸ்

x

மைக்ரோசாப்ட்டின் வின்டோஸ் செயலிழப்பினால், சென்னை

விமான நிலையத்தில் கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ்

வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கூடுதல் ஊழியர்கள்

மூலம் போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதி அளிக்கப்பட்டன. இதனால் சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூர், மதுரை, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விமானங்கள், 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இந்த பிரச்சனைக்கு என்ன காரணம், எப்போது தீர்வு கிடைக்கும் என்பது பற்றி விமான சேவை நிறுவனங்கள் தகவல் எதையும் வெளியிடவில்லை.


Next Story

மேலும் செய்திகள்