சாப்பிட்டு விட்டு சாவகாசமாக சென்ற இளைஞர்.. - காசு கேட்ட ஓனருக்கு நேர்ந்த கதி...

x

மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியர்கள் மீது போதை இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டலில் மது போதையில் சாப்பிட்ட இளைஞர் ஒருவர் பணம் தராமல் புறப்பட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் வந்த அவர், சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து, அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்