பேசி கொண்டிருந்த நகர மன்ற தலைவர்! டம்ளரை பறக்கவிட்ட அதிமுக உறுப்பினர்! நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு

x

மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில், மேஜை மீது அதிமுக நகரமன்ற உறுப்பினர் குடிநீர் டம்ளரை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டம், நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் தலைமையில் இன்று நடைபெற்றது. நகரில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததை கண்டித்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் நகர மன்ற தலைவர் இருக்கைக்கு முன்பு தரையில அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் மீது விவாதங்கள் தொடங்கின. அப்போது திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர் ஒருவர், திடீரென நகர மன்ற தலைவர் முன்பு இருந்த மேஜை மீது குடிநீர் டம்ளரை எடுத்து வீசினார். அப்போது அதிமுக திமுக நகரமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் பாஸ் என்று கூறி விட்டு நகர மன்ற தலைவர், நகராட்சி ஆணையர் மற்றும் திமுக உறுப்பினர்கள் நகரமன்ற கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்