மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்... தடபுடலாக தயாராகும் கம கம விருந்து | Madurai

x

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதற்கான மேடையலங்கார பணிகள் நடைபெற்ற நிலையில், வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால் திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல்களும், 20 எல்.இ.டி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பக்தர்களுக்கு, மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ஆறாயிரம் கிலோ அரிசி, 7 டன் காய்கறிகளை கொண்டு சமையல் பணிகள் நடைபெற்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்