வானிலிருந்து பெண்ணுக்கு நொடியில் வந்த மரணம்... ஊர் தலையில் `பேரிடி’

x

வானிலிருந்து பெண்ணுக்கு நொடியில் வந்த மரணம்... ஊர் தலையில் `பேரிடி’

நடவு நடும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது மின்னல் தாக்கி வயலிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அகரஎலத்தூர் பகுதியில் ராஜ்மோகன் என்பவரது வயலில், சாந்தி என்பவர் நடவு நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த சாந்தி மீது மின்னல் தாக்கி அங்கேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்