காவல்நிலைய வாசலிலேயே காதலிக்கு தாலி கட்டிய இளைஞர் - ஷாக்கான போலீஸ்

x

காவல்நிலைய வாசலிலேயே காதலிக்கு தாலி கட்டிய இளைஞர் - ஷாக்கான போலீஸ்

மயிலாடுதுறையில் காவல்நிலைய வாசலில் வைத்தே இளைஞர் ஒருவர் தன் காதலிக்கு தாலி கட்டி அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை கவரத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 19 வயதேயான இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்த 19 வயதேயான ஜெயலட்சுமி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெண் வீட்டார் ஜெயலட்சுமியை வேலைக்காக சென்னை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் சென்னையில் இருந்து யாருக்கும் தெரியாமல் தன் காதலன் வீட்டிற்கு சென்று வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மாதச் சம்பளத்தை மகள் அனுப்பாததால் சந்தேகமடைந்த ஜெயலட்சுமியின் பெற்றோர், இது குறித்து விசாரித்த போது அனைத்தும் தெரியவந்திருக்கிறது. உடனே, அவர்கள் போலீசில் புகாரளித்த நிலையில், காதலர்களை மயிலாடுதுறை காவல்நிலையம் அழைத்த போலீசார், இருவரையும் அறிவுறுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது காவல்நிலையம் வாசலில் வைத்தே தான் மறைத்து கொண்டு வந்த தாலியால் பெண்ணை திருமணம் செய்து கொண்டு இளைஞர் அழைத்துச் சென்றது பரபரபப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் இளைஞர் கிருஷ்ணகுமார் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்