லாரியை மறித்து உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ந்த போலீசார்... தீபாவளி நெருங்கும் நேரத்தில் பரபரப்பு

x

லாரியை மறித்து உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ந்த போலீசார்... தீபாவளி நெருங்கும் நேரத்தில் பரபரப்பு

சீர்காழியில் ஆவணங்கள் இல்லாமல் லாரியில் கொண்டுசெல்லப்பட்ட 400 கிலோ நாட்டு வெடிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கோவில்பத்து நான்கு வழிச்சாலையில் சென்ற லாரி ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 40 மூட்டைகளில் சுமார் 400 கிலோ எடை கொண்ட நாட்டு வெடிகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு எடுத்து செல்வதாக தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், போலீசார் லாரி ஓட்டுநரை சீர்காழி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்