தமிழக மீனவர்கள் 37 பேருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு | mayiladuthurai

x

நெடுந்தீவு அருகே சிறைபிடிக்கப்பட்ட மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 37 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்