காதல் கணவன் உயிர் துடிப்பை கேட்ட அதே இடத்தில் உயிரை விட்ட மனைவி..கசந்த வாழ்க்கையால் விபரீத முடிவு

x

காதல் கணவன் உயிர் துடிப்பை கேட்ட

அதே இடத்தில் உயிரை விட்ட மனைவி

கசந்த வாழ்க்கை..காற்றில் கரைந்த இரு உயிர்

காதலில் வெற்றி பெற்று, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்... இறுதியில், திருமண வாழ்க்கை கசந்ததில் எடுத்திருக்கும் விபரீத முடிவு சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... பார்க்கலாம் விரிவாக...

சேலம் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த போராட்டத்தின் பின்னணியில்... காதல் திருமணம் செய்த இளம் தம்பதியின் உயிர் பறிபோயிருப்பதும், அதற்கான காரணமும் மனதை ரணமாக்கி இருக்கிறது...

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ள துட்டம்பட்டியை சேர்ந்தவர் பூபாலன்... 23 வயதேயான இவர்... 21 வயது இளம் பெண்ணான மேகலா என்பவரை கடந்தாண்டு காதலித்து கரம் பிடித்திருக்கிறார்...

சொந்தமாக பாஸ்ட்புட் வைத்து பூபாலன் தொழில் செய்து வந்த நிலையில், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்சினை நிலவி வந்ததாக கூறப்படுகிறது...

இவ்வாறு சில நாட்களுக்கு முன்பு நடந்த தகராறு முற்றியதில், பூபாலன் விஷமறிந்து த*கொலைக்கு முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அதற்குள் அங்கு பூபாலனின் மனைவியை இழந்து உறவினர்கள் கதறியது மருத்துவமனைக்குள் இருந்தவர்களை பதைபதைக்கச் செய்து மனதை உறைய வைத்திருக்கிறது...

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பூபாலனுக்கு சிகிச்சையின் போது மூச்சுத்திணறல் அதிகமானதாக கூறப்படுகிறது..

இதனால், அவர் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் சொன்னதாக கூறப்படும் நிலையில், இதையறிந்த பூபாலனின் காதல் மனைவி மேகலா மனமுடைந்து மருத்துவமனை கட்டடத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்..

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் மேகலா திரும்பி வராததால் அவரை அழைத்து வரச் சென்ற உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரம் ஒன்றில் தனது துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில், பெண்ணை சடலமாக கண்டு நிலை குலைந்து போயிருக்கின்றனர்...

ஏற்கனவே ஒரு உயிரை ஐசியூவில் அனுமதித்துவிட்டு தீரா மன வேதனையுடன் காத்திருந்த உறவினர்களுக்கு இந்த உயிர்பலி ஏற்படுத்திய வலி சொல்லி மாளாது...

இதனால், மனம் வெதும்பி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற உறவினர்கள், பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

இதனிடையே சிகிச்சை பெற்று வந்த பூபாலனும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறவினர்களை நடை பிணமாக்கியது...

காதலித்து திருமணம் செய்த இருவர்... இரு ஆண்டை கடப்பதற்குள் வாழ்க்கை கசந்து மோதிக்கொண்டதும், இதில் எடுத்த விபரீத முடிவில் இரு உயிரும் பறிபோனது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்