குடும்பத்தோடு மெரினாவில் செல்லும்போது உடல் சிதைந்து 5 வயது குழந்தை பலி -கதறும் அப்பா

x

குடும்பத்தோடு மெரினாவில் செல்லும்போது உடல் சிதைந்து 5 வயது குழந்தை பலி - பார்த்து பார்த்து கதறும் அப்பா

சென்னையில் ஆட்டோ கவிழ்ந்து 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த கோபி என்பவரின்

5 வயது குழந்தை மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது போக்குவரத்தை சரி செய்ய போலீசார் ஒரு காரை நிறுத்திய போது முந்தி சென்ற

ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது . இந்த விபத்தில்

ஆட்டோவுக்கு அடியில் சிக்கி கொண்ட குழந்தைக்கு

பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ்

மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட

அக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் குழந்தையின் உடல்

ஒப்படைக்கப்பட்டது. பெற்றோரும், உறவினர்களும்

குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரையும்

சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்