உயிர் பயத்தில் மெரினாவில் 5 நாளாக மகனுடன் அபலை பெண் தஞ்சம்.. நெஞ்சை நொறுக்கும் பின்னணி

x

வட்டிக்கொடுமையால் மெரினா கடற்கரையில் தஞ்சமடைந்த பெண், அசலை மட்டும் கொடுக்க வழிவகை செய்யுமாறு போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையை சேர்ந்த ரெஜினா என்ற பெண் கணவரை பிரிந்த நிலையில், சென்னையில் லோடு வாகனம் ஓட்டும் பணிபுரிந்து வந்துள்ளார். வீடு கட்டுவதற்காக விஜயகுமார் என்பவரிடமிருந்து, ரெஜினா இரண்டரை லட்சம் ரூபாய் கடன் பெற்ற நிலையில், விபத்தில் சிக்கி காலில் அடிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாத நிலையில் வட்டி செலுத்த முடியாமல் தவித்த ரெஜினாவை, விஜயகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரெஜினா தனது மகனுடன் கடந்த 5 நாட்களாக மெரினா கடற்கரையில் தஞ்சம் புகுந்துள்ளார். இதையறிந்த சமூக ஆர்வலர் சசிகுமார் என்பவர் ரெஜினாவிற்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். தற்கொலை எண்ணத்துடன் கடற்கரைக்கு வந்ததாகவும், மகன் இருந்ததால் மனம் மாறியதாகவும் அப்பெண் கண்ணீருடன் தெரிவித்தார். தகவலறிந்து போலீசார் விரைந்த நிலையில், வாங்கிய கடனின் அசல் தொகையை மட்டும் கொடுக்க வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்