போலீசாரை ஆபாசமாக திட்டிய மெரினா ஜோடி.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | Marina beach video

x

சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட சந்திர மோகன் ஜாமின் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் எடுக்குமாறு கூறிய போது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் போலீசாரை ஆபாசமாக திட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சந்திரமோகன் ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்