மெரினாவில் அடிக்கடி உல்லாசம்.. கர்ணகொடூரமான பல அசிங்கம் அம்பலம் - `தகாத’ ஜோடியின் புதிய நாராச தகவல்

x

மெரினாவில் அடிக்கடி உல்லாசம்.. கர்ணகொடூரமான பல அசிங்கம் அம்பலம்.. தமிழகமே காரி உமிழ்ந்த `தகாத’ ஜோடியின் புதிய நாராச தகவல்

போலீசாரிடம் மதுபோதையில் அடாவடி செய்து சிக்கிய காதல் ஜோடி, காவலர்களிடம் சிக்கி கண்ணீருடன் கதறிய சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு..

அந்நியன் ரெமோவாக ரொமாண்டிக் மோடில் மெரினா பீச்சுக்கு வந்து போலீசாரிடம் அடாவடி செய்த இந்த காதல் ஜோடி.. தற்போது அம்பியாக மாறி போலீசாரிடம் கதறி இருக்கின்றனர்..

தடை செய்யப்பட்ட பகுதியில் காரை நிறுத்தியதால் எடுக்க சொன்ன போலீசாரிடம்.. இருவரும் தெனாவெட்டாக பேசியதோடு, மதுபோதையில் போலீசாரை நக்கலடித்து நய்யாண்டி செய்ய... சம்பவத்தின் வீடியோ இணையத்தில் படு வைரலானது...

அதிலும் அந்த நபரின் கையை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்ட இந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் ஹிட்..

விடிந்ததும் விசாரணையை கையிலெடுத்து இருவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி மைலாப்பூர் காவல் நிலையம் அழைத்து வந்த நிலையில், விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது...

இரவின் போது, நீ வீடியோ எடு.. வீடியோ எடு.. என போலீசார் முன் ஸ்டைலாக போஸ் கொடுத்து கெத்து காட்டிய இந்த மன்மதன், போலீசார் அழைத்து வரும்போது முகத்தை கர்சிப்பால் மூடியபடி குடுகுடுவென ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது...

என் பிள்ளைகள் முன்னாடி என்னை கைது செய்து அழைத்து வந்து வீட்டீர்களே என இப்பெண் ஒரு பக்கமும்... மறு பக்கம் ஐயா மதுபோதையில் தெரியாமல் பேசி விட்டேன் எனவும், அமைச்சரின் பெயர் தவறுதலாக என் வாயில் வந்து விட்டது என இவரும் போலீசாரிடம் கதறி மன்றாடி இருக்கின்றனர்...

இந்நிலையில், இருவரையும் தங்கள் பாணியில் போலீசார் விசாரிக்க ஆரம்பித்த போது, இருவரும் தகாத உறவில் இருந்து வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது..

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவரான இந்த சந்திரமோகனும், மைலாப்பூரை சேர்ந்தவரான இந்த தனலட்சுமியும் சுமார் 15 வருடங்களாக தகாத உறவில் இருந்து வந்திருக்கின்றனர்...

இருவருக்கும் தனித்தனியே திருமணமாகி குடும்பம், பிள்ளைகள் இருப்பதும், இதில் தனலட்சுமிக்கு கல்லூரியில் படிக்கும் அளவுக்கு இரு மகள்கள் இருக்கிறார்களாம்..

பல வருடங்களாக தினமும் இரவில் மெரினா பீச்சுக்கு வந்து இருவரும் மது அருந்தி உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்திருக்கிறது...

இந்நிலையில், ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில், மதுபோதையில் நிதானமற்று இவ்வாறு நடந்து கொண்டதாகவும், தன் தவறை உணர்ந்து விட்டதாகவும் கூறி வீடியோ மூலம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் சந்திரமோகன்...

நடந்தது நடந்துடுச்சு.. மன்னிச்சுடுங்க என காலில் விழுந்து கதறி இருந்தால் கூட மன்னித்து விட்டிருப்பார்கள்.

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனே.. மன்னர் பரம்பரை அது இதுன்னு என வடிவேலு பாணியில் இப்போது சந்திரமோகன் கதறிக் கொண்டிருக்கிறார்.. கூடவே தனலட்சுமியும்..


Next Story

மேலும் செய்திகள்