மெரினா மரணங்கள்.. கனிமொழி போட்ட பரபரப்பு ட்வீட்

x

விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள், கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில், 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்