சென்னையில் நேற்று ஒரே நாளில்.. திணறடிக்க வைத்த தகவல்

x

சென்ன ை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமான படையின் 92 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த நிலையில், முக்கிய சாலைகள் உட்பட பொதுப் போக்குவரத்துகளும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து போனது. இதன் ஒரு பகுதியான சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களும் கூட்ட நெரிசலோடு காணப்பட்டது. வழக்கமாக ஞாயிறு அன்று ஒரு லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் நிலையில் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி 3,74,087 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ள நிலையில் அந்த சாதனையை முறியடித்து தற்பொழுது புதிய எண்ணிக்கையை எட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்