"குமரியில்...." - அமைச்சர் சொன்ன மிக முக்கிய தகவல் | mano thangaraj

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகளைத் துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தார்...நாகராஜா கோயிலில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் குடமுழுக்கு திருப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டன. இந்த திருப்பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் துவக்கி வைத்தார். முன்னதாக திருப்பணிகள் தொடங்குவதற்கான பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நாகராஜா கோயிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தார். அவருடன் மாநகராட்சி மேயர் மகேஷும் பால் ஊற்றி தரிசனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்