மாஞ்சோலை மக்கள் மேல் விழுந்த கருணை ஒளி

x

மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, பி.பி.டி.சி.எல். நிறுவனம், புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பி.பி.டி.சி.எல். நிறுவனத்தின் அனைத்து முன்னாள் தொழிலாளர்களுக்கும் 75 சதவீத கருணை தொகையை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அனைத்து தொழிலாளர்களுக்கான கருணை தொகையும், இன்னும் 3 நாட்களில் டெபாசிட் செய்யப்படும் என்று நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கருணை தொகையை, நாகர்கோவில் உதவி தொழிலாளர் ஆணையரிடம், முன்னாள் ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை தளர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்