ஒரே ஈவெண்ட்டில் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பிய பெயர்.. நாளை அறிக்கை தாக்கல்

x

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருடன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆலோசனை நடத்தினார்.

அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மேலாண்மை குழு உறுப்பினர்களிடம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விசாரணை நடத்தினார். மேலும், பள்ளித் தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்? மகாவிஷ்ணுவை பரிந்துரைத்தது யார்? போன்ற கேள்விகளுக்கு ஆசிரியர்கள் முழுமையான தகவல் தரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பள்ளிக்கல்வித்துறை செயலாளரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான அறிக்கை இறுதி கட்டத்தை எட்டியதாக கூறப்படும் நிலையில், நாளை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்