மகாவிஷ்ணுவை எதிர்த்து கேள்வி கேட்ட ஆசிரியரை சந்திக்க-சைதைக்கு பதில் அசோக்நகர் சென்ற அர்ஜுன் சம்பத்

x

பள்ளிக்கூடத்தில் ஆன்மிகம் பேசுவது தவறு கிடையாது என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது சம்பந்தமாக அவர் ஆய்வு செய்ய வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், பள்ளியில் ஆன்மீகம் பேசுவது தவறில்லை என்று கூறினார்.

மகாவிஷ்ணுவிடம் எதிர்த்து கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கரை சந்தித்து விசாரிக்கலாம் என்று வந்ததாகவும், ஆனால் அவர் சைதாப்பேட்டை மாதிரி பள்ளியில் பணிப்புரிவதாகவும், தவறுதலாக அசோக் நகர் பள்ளிக்கு வந்துவிட்டதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்