ஆம்னி பேருந்து டிக்கெட்டால் வந்த வினை.. ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கியதால்..தீயாய் பரவிய வைரல் வீடியோ

x

மதுரையில், ஆர்.பி.டி டிராவல்ஸ் என்ற பெயரில் ராஜசேகர் என்பவர் ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகிறார். இவரிடம் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்த பால கருப்பையாவும், அப்பேருந்தின் உதவியாளருமான அஜய் என்பவரும், பயணிகளிடம் வசூல் செய்த பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், விசாரணை பெயரில் இருவரையும் தனது அலுவலகத்திலே கட்டி வைத்து ராஜசேகர் தாக்கிய நிலையில், இது குறித்தான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்