மதுரையை உலுக்கிய தாயின் ஆடியோ..நடுங்கவிட்ட Ex போலீஸ், வக்கீல் கைது - விசாரணையில் அடிபட்ட சென்னை

x

மதுரையில் பள்ளி மாணவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.மதுரையில் 15 வயது பள்ளி மாணவனை மர்ம கும்பல் கடத்திச் சென்று பின்னர் விடுவித்தது. இது தொடர்பாக வசாரணை நடத்திய போலீசார், நெல்லையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, குற்ற வழக்கில் உடந்தையாக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் செந்தில் குமார், தென்காசியைச் சேர்ந்த வீரமணி, காளிராஜ், மதுரை வழக்கறிஞர் மகாராஜன் ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வசதியான பின்புலம் கொண்ட குழந்தைகளைக் கடத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கில், ஏற்கனவே சென்னையில் ஒருமுறை இதுபோன்ற கடத்தல் சம்பவத்தில் இந்த கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதே நோக்கத்துடன் மதுரையிலும் இந்த கும்பல் கடத்தலில் ஈடுபட்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்