வீடு இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் வாழ்ந்த தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்.. ஸ்பாட்டிலேயே பிரிந்த உயிர்

x

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, பேருந்து நிறுத்தத்தில் தங்கி துடைப்பம் விற்று வியாபாரம் செய்து வந்த மூதாட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலூர் அருகேயுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தில் இந்த கொலைச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அழகு - பாப்புரம்மாள் என்ற வயதான தம்பதி, பேருந்து நிறுத்தத்தில் தங்கி தென்னை விளக்குமாறு விற்று வியாபாரம் செய்து வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு இருவரையும் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில், மூதாட்டி பாப்புரம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டியின் கணவர் அழகு படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார், தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்