தீபாவளி ட்ரெஸ் எடுக்க மதுரை வந்த கணவன் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி- ஊர் திரும்பும் போது பயங்கரம்

x

தீபாவளி ட்ரெஸ் எடுக்க மதுரை வந்த கணவன் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி - ஊர் திரும்பும் போது பயங்கரம்

மதுரை அருகே ஓடும் கார், திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவன ஊழியரான சரவணன், புத்தாடை எடுப்பதற்காக மதுரைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது விரகனூர் சுற்றுச்சாலை மேம்பாலத்தின் அருகே வரும் போது, சரவணனின் காரில் இருந்து புகை எழுந்துள்ளது. உடனடியாக காரை நிறுத்திய சரவணன், தனது மனைவியுடன் காரில் இருந்து இறங்கினார். அடுத்த சில வினாடிகளில் கார் தீப்பற்றி எரியத் துவங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்