கட்டி தொங்கவிடப்பட்டு டார்ச்சர்... கதறிய டிரைவர்... ரண வேதனை கொடுத்த ஓனர்...அதிர வைக்கும் வீடியோ...

x

மதுரையில் பேருந்து ஓட்டுநரை, கையை கட்டிப்போட்டு விசாரணை நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர், பயணிகள் சிலரை பேருந்தில் ஏற்றியதற்கான பணத்தை தனது ஃபோன் மூலம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஓட்டுநரிடம் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், ஜன்னலில் கையை கட்டி வைத்து முதலில் தாக்கியதாக கூறப்படும் நிலையில், பின்னர் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக விசாரிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மாட்டுத்தாவணி போலீசார் நேரில் சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்