திருமங்கலத்தை உலுக்கிய விபத்து..சாலையில் ஒளிந்திருந்த எமன்.. நேரில் பார்த்தவர் திக்திக் பேட்டி

x

திருமங்கலத்தை உலுக்கிய விபத்து..சாலையில் ஒளிந்திருந்த எமன்..இருவர் பலி.. நேரில் பார்த்தவர் திக்திக் பேட்டி - "கை, கால்லாம் ஓடவே இல்ல"

மதுரை திருமங்கலம் அருகே விபத்தில், 2 பெண் தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த‌தால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குண்டும் குழியுமாக உள்ள விமான நிலைய சாலையில், ஆண் ஒருவரின் இருசக்கர வாகனத்தில், தூய்மை பணியாளர்கள் நாகரத்தினம் மற்றும் லட்சுமி ஆகியோர் வந்துள்ளனர். திடீரென இருசக்கர வாகனம் தடுமாறி சாய்ந்து, தூய்மை பணியாளர்கள் வலதுபுறமாக விழுந்துள்ளனர். அப்போது, பின்னால் வந்த லாரி ஏறியதில், 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் மற்றும் பைக் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், சாலையை சீரமைக்காத‌தே விபத்து காரணம் என குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி ஆணையர் 4 நாட்களுக்குள் சாலை அமைப்பதாக உத்தரவாதம் அளித்த‌தால் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்