மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி

x

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த மூத்த குடிமகன்களான வெங்கடேசன் மற்றும் அவரது சகோதரர்கள் சுப்பிரமணியன், லட்சுமணன் ஆகிய மூன்று பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அமைவதற்காக தங்களது 5 ஏக்கர் நிலத்தை அரசு நிர்ணயம் செய்த விலைக்கு வழங்கி உள்ளனர். ஆனால், அவர்கள் வழங்கிய நிலத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கான வட்டியை வழங்காதது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், பணத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் பணத்தை வழங்காததால் நீதிமன்ற உத்தரவின் படி, மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஜீப், டேபிள், பீரோ, கம்ப்யூட்டர் மற்றும் ஷேர் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யப்பட்டன. இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் தரப்பில் மூன்று நாட்களுக்குள் நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்