அரசு வேலை பலகோடி ரூபாய் மோசடி - கமிஷனர் ஆஃபிஸில் பரபரப்பு புகார்

x

மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த கவுதம் என்பவர் மீது, தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா, மாநகர காவல் ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் மனு அளித்துள்ளார். அதில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதுடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமன ஆணை வழங்கியது போன்ற போலி கடிதத்தையும், போலி அடையாள அட்டைகளையும் கொடுத்து மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளார். மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் கவுதம், சுமார் 4 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்