திடீர் ஆய்வில் அமைச்சர் கண்ணில் பட்ட அதிர்ச்சி - உடனே போன் காலில் போட்ட பரபர உத்தரவு

x

திடீர் ஆய்வில் அமைச்சர் கண்ணில் பட்ட அதிர்ச்சி - உடனே போன் காலில் போட்ட பரபர உத்தரவு

மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் பொது சுகாதார ஆய்வக கட்டிடம் திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராத மாவட்ட சுகாதார அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

வளையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார ஆய்வக கட்டடத்திற்கு மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் வழங்கப்படாததால் பயன்பாட்டிற்கு வராதது தெரியவந்தது. இதையடுத்து மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்