காலை கிச்சடி, வெண்பொங்கல், கேசரி, வடை... - தடபுடலாக மீனாட்சி - திருக்கல்யாண விருந்து

x

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சார்பில் சேதுபதி மேல் நிலைப் பள்ளியில் தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது... நேற்று மாப்பிள்ளை அழைப்பிற்காக 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு விருந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து இன்று திருக்கல்யாணத்தை ஒட்டி காலை முதல் மாலை வரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு விருந்து தயாரானது. காலை உணவாகக் கிச்சடி, வெண்பொங்கல், கேசரி, வடை வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்திற்குப் பிறகு சாம்பார் சாதம், வெஜ் பிரியாணி, தயிர் சாதம் தயார் செய்யப்பட்டுப் பரிமாறப்படுகிறது. 6 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான அரிசி, 6 டன் காய்கறிகள், மற்றும் சமையல் பொருட்கள் பயன்படுத்தி, 300க்கும் அதிகமான பெண்கள் காய்கறி வெட்ட, 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் கைவண்ணத்தில் அசத்தல் விருந்து தயாரானது.


Next Story

மேலும் செய்திகள்